கிளிநொச்சி முறிப்பு விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தின் 2020ஆம் ஆண்டிற்கான மெய்வல்லுனர் இல்ல விளையாட்டுப்போட்டிகள் இன்று (28) இடம்பெற்றன.
குறித்த விளையாட்டு போட்டிகள் பாடசாலை அதிபர் கண்ணபிரான் தலைமையில் முறிப்பு புதிதாக அமைக்கப்பட்ட பொது மைதானத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாக தனியார் பல்கலைக் கழக பிராந்திய பணிப்பாளர் அன்றேவ் அன்ஸ்லி கௌரவ அதிதியாக பிரதேச சபை உறுப்பினர் ச.ஜீவராசா சிறப்பு அதிதிகளாக கரைச்சி கோட்டக் கல்விப்பணிப்பாளர் தர்மரட்ணம் , விவசாய ஆசிரிய ஆலோசகர் திருமதி தர்மகுலசூரியர் புதுமுறிப்பு கிராம அலுவலர் திருமதி பாலகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த விளையாட்டுப்போட்டியில் முல்லை, தாமரை மற்றும் மல்லிகை ஆகிய இல்லங்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டிஇருந்தமை குறிப்பிடத்தக்கது .