Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா கொரோனவில் இருந்து தப்பிய மாணவர்கள்.

கொரோனவில் இருந்து தப்பிய மாணவர்கள்.

1 minutes read

சீனாவின் வூஹான் நகரில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு தியத்தலாவ முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை மாணவர்கள் வெற்றிகரமாக தொற்று நோய் சிகிச்சைகளை தொடர்ந்து இன்று தமது வீடுகளுக்கு சென்றுள்ளனர். இதேநேரம் சீனாவுக்கு வெளியே கொவிட் 19 வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார தாபனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக சீனாவின் வூஹான் நகரம் தனிமைப்படுத்தப்பட்டது. அங்கிருந்து எவருக்கும் வெளியே செல்லவோ பிரவேசிப்பதற்கோ தடை செய்யப்பட்டிருந்தது. பெரும்பாலான நாடுகள் தமது நாட்டவர்களை வூஹான் நகரில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்தனர். இலங்கை மாணவர்கள் உள்ளிட்ட 33 பேரை வூஹான் நகரில் இருந்து வெளியேற்ற இலங்கை அரசாங்கமும் உயர்ந்தபட்ச முயற்சிகளை மேற்கொண்டது. விசேட பயிற்சி பெற்ற ஸ்ரீ லங்கன் விமானச்சேவை ஊழியர்கள் கடந்த முதலாம் திகதி இலங்கைக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் அவர்கள் தியத்தலாவ இராணுவ முகாமில் பராமரிக்கப்பட்டு வந்தனர். அவர்களுக்கு உயர்ந்தபட்ச வசதிகளை செய்து கொடுக்குமாறு ஜனாதிபதிஅதிகாரிகளை பணித்திருந்தார். இதேவேளை அவர்களுக்கான பரிசோதனைகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் தியத்தலாவையிலிருந்து அவர்கள் அனைவரும் இன்று கொழும்பு திரும்பினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More