Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை திருகோணமலையில் தனியார் வகுப்பிற்கு தடை

திருகோணமலையில் தனியார் வகுப்பிற்கு தடை

1 minutes read

திருகோணமலை நகராட்சிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியினுள் டெங்கு நோய் பரவிவருவதால் டெங்கு நோய் தடுப்பு பிரிவு, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், கல்வி பணிப்பாளர் காரியாலயம் மற்றும் நகரசபையும் சேர்ந்து தனியார் கல்வி நிறுவன பணிப்பாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோருடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய மாசி மாதம் 15ம் திகதிக்கு முன்னர் சகல தனியார் வகுப்புக்களுக்குமான அனுமதிப்பத்திரம் பெறப்பட வேண்டும். அனுமதிக்காக விண்ணப்பிக்கும் கட்டடத்தை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், பிரதேசசெயலகம் மற்றும் நகரசபையும் பார்வையிட்டு வகுப்பறைக்குள் நுளம்புகள் செல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களுக்கு மாத்திரமே அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.

அனுமதிப்பத்திரம் இல்லாது வகுப்புக்களை நடாத்தும் கல்வி நிலைய உரிமையாளர்களுக்கு நகரசபையால் நடவடிக்கை எடுக்கப்படும். டெங்கு நோயிலிருந்து மாணவர்களை காப்பாற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

தலைவர்
நகராட்சி மன்றம்
திருகோணமலை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More