0
நாள் ஒன்றுக்கு 500 போத்தல்களிற்கு மேல் கள் வீணாக ஊற்றப்படும் நி்லையில், தென்னிலங்கையிலிருந்து போத்தல்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கிளிநொச்சி கள் உற்பத்தி தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே தொழிலாளர்கள் இவ்வாறு கரு்தது தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தின் கிளிநொச்சி கிளையின் கீழ் உள்ள 150க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் குறித்த விடயத்தினால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். தற்புாது பருவ கால உற்பத்திகள் போதுமான அளவு கிடைக்கின்றது. இவ்வாறான நிலையில்தானம் எமது வாழ்வாதாரத்தினை முன்னுற்ற முடியும். இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு தென்னிலங்கையிலிருந்து இற்குமதி செய்யப்படும் போத்தலில் அடைக்கப்பட்ட கள் விற்பனை செய்யப்படுகின்றத. அவை இயற்கைக்கு அப்பால் மாத்திரைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டவை .அவற்றை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வதனால் எமது வாழ்வாதாரம் பாதிக்கின்றது. 40 அடி மர்ததில் ஏறி இறங்கியே இவ்வாறான தொழிலை முன்னெடுக்கின்றோம். இந்த நிலையில் உற்பத்தியாகும் உற்பத்திகள் கீழே உற்றப்படுகின்றன.
கண்டாவளை பிரதேசத்தில் மாத்திரம் 200 போத்தல்களிற்கு அதிகமாக நாளாந்தம் வீணாக ஊற்றப்படுகின்றது. இந்த நிலையில் னைய இடங்களிலும் இதே நிலை காணப்படுகின்றது. இரணைமடுவில் அநைம்தள்ள கள் விற்பனை நிலையத்தில் 90 போத்தல்கள் வரை இன்று மாத்திரம் அடைக்கப்பட்ட கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதை நாங்கள் பார்த்தோம். இரவோடு இரவாக களங்சியங்களிலிருந்து மாற்றப்பட்ட இவ்வாறு விற்பனை செய்யப்படுகின்றத. போதிய உற்பத்திகள் இல்லாத சந்தர்ப்பத்தில் இவ்வாறு போத்தல்களில் அடைக்கப்பட்டவற்றை விற்பனை யெ்யலாம். ஆனால் தற்புாது பருவகால உற்பத்திகள் அதிமாகவே கிடைக்கின்றது. அதனை வீணாக கீழே உற்றிவிட்டு தென்னிலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட புாத்தல் கள் விற்பனை செய்யப்படுகின்றமையானது எமது வாழ்வாதாரத்தினை பாதிக்கும் செயலாகவே உள்ளது.
கடந்த வருடம் 12ம் மாதம் பளை பிரதேசத்தில் மேலதிகமாக காணப்படும் கள் உற்பத்திகளை 50 ரூபாவிற்கு தருவதாகவு்ம, அதனை வீண் விரயமாக்காது விற்பனை செய்து தமது தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் பாதுகாத்து தருமாறு எழுத்து மூலமாக கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு செவி கொடுக்காது இவ்வாறு போத்தலில் அடைக்கப்பட்ட கள் உற்பத்திகளை கொண்டு வந்து விற்பனை செய்வதானது ஊழல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளாகவே நாங்கள் பார்க்கின்றோம். அரசியல் செயற்பாடுகளில் உள்ளஒருவரின் குறித்த
செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார். இங்கு உள்ள சங்கத்தினை இயங்க விடாது்ம, அவர்களது தீர்மானத்திற்கு மாறாகவும் தன்னிச்சையாக தலையீடு செய்கின்றார். இந்த நிலையில் தொழிலாலளர்களாகிய நாங்கள் மிகவும் பாதிக்கின்றோம். 50 ரூபாவிற்கு பச்சிலைப்பள்ளியிலிருந்து உற்பத்திகளை பெற்று விற்பனை செய்யாதவர்கள் அதைவிட குறைவாகவே போத்தலில் அடைக்கப்பட்ட உற்பத்திகளை பெற்று விற்பனை செய்கின்றனர்.
இவ்வாறு இலாபத்தை நோக்காக கொண்டு மாத்திரம் இயங்கும் இவர்கள் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொள்ளாமை கவலை அளிக்கின்றத. நாளாந்தம் வீண் விரயமாக்கப்படும் தமது உற்பத்திகளை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு அவர்கள் இதற்போது கோரிக்கை விடுத்தனர்.