March 24, 2023 3:39 pm

முல்லைத்தீவில் ஒருலட்சம் மரங்களை நடும் பணி ஆரம்பம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
முல்லைத்தீவு பகுதியில் அவலோன் றிசோட் இஸ்பா நிறுவனம் பல லட்சம் செலவில்  ஒருலட்சம் மரக் கன்றுகள் நடும் வேலைத்திட்டம் ஒன்றை இன்று ஆரம்பித்தது வைத்துள்ளனர்
சுற்றுச்சூழல் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டு முல்லைதீவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் அவலோன் றிசோட் இஸ்பா நிறுவனம் கரைதுறைப்பற்று பிரதேச சபையுடன் இணைந்து மரக் கன்றுகளை நடும் பணியை இன்று பிற்பகல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளனர்
இன் நிகழ்வில் கரைதுறைப்பற்று சபை தவிசாளர் உறுப்பினர்கள் அவலோன் நிறுவன இலங்கைக்கான இணைப்பாளர் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
அவலோன் நிறுவனம் கடந்த பல வருடங்களாக  வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு பல சேவைகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்