Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை வெளியானது!

மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை வெளியானது!

1 minutes read

மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை வெளியானது!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 196 உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதில் ஆகக்கூடிய உறுப்பினர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து தெரிவாக இருப்பதுடன் ஆகக்குறைந்த உறுப்பினர்கள் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட உள்ளனர்.

அந்தவகையில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து 19 உறுப்பினர்களும் கம்பஹா மாவட்டத்தில் 18, களுத்துறையில் 10, கண்டி 12, மாத்தளை 05, நுவரெலியா 08, காலி 09, மாத்தறை 07, ஹம்பாந்தோட்டை 07, யாழ்ப்பாணம் 07, வன்னி 06 மட்டக்களப்பு 05, திகாமடுல்ல 07, திருகோணமலை 04, குருணாகல் 15, புத்தளம் 08 அநுராதபுரம் 09, பொலன்னறுவை 05, பதுளை 09, மொனராகலை 06, இரத்தினபுரி 11 மற்றும் கேகாலை மாவட்டத்தில் இருந்து 09 உறுப்பினர்கள் என 196 உறுப்பினர்கள் மொத்தமாக மக்களால் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

அத்துடன் கட்சிகளின் வேட்புமனுவில் அந்ததந்த மாவட்டங்களில் இருந்து தெரிவுசெய்யப்படும் மொத்த உறுப்பினர்களின் தொகையைவிட 3 உறுப்பினர்களின் பெயர்கள் மேலதிகமாக இடப்பட வேண்டும் எனவும் ஆணைக்குழுவின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 19 ஆம் திகதியுடன் முடிவடைகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More