நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் பல முறை கட்சி தாவிய இலங்கையின் 1வது பிரதமர் D.S சேனாநாயக்கவின் பேரனும், முன்னாள் பொலன்னறுவை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான வசந்த சேனாநாயக்கவுக்கு இம்முறை மூன்று பிரதான கட்சிகளிலும் வேட்புமனு வழங்கப்படவில்லை.
கடந்த பாரளுமன்றத்தில் அங்கம் வகித்த முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர்கள் எட்டுப் பேருக்கும் இம்முறை மூன்று பிரதான கட்சிகளும் வேட்புமனுக்களை வழங்கவில்லை.
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, கலாநிதி சரத் அமுனுகம, வசந்த சேனாநாயக்க, பைஸர் முஸ்தபா, S.P நாவின்ன, நிஷாந்த முத்துஹெட்டிகம, மொஹான் லால் கிரேரு, சாகல ரத்நாயக்க ஆகிய முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கே எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட பிரதான கட்சிகள் எதுவும் வாய்ப்பு வழங்கவில்லை.
வணக்கம் லண்டனுக்காக
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்