0
பொதுத் தேர்தலுக்காக 800 கோடி ரூபாய்களை ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பொதுத்தேர்தலின்போது எவ்வித நிதி தட்டுப்பாடும் ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு 600 கோடி ரூபாய் செலவாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.
பின்னர் அது வேட்பாளர்களை பொறுத்து அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையிலேயே அமைச்சரவை 800 கோடி ரூபாவுக்கு அங்கீகாரம் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வணக்கம் லண்டனுக்காக
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்