கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றும் பொலிஸ் ஊரடங்கு சட்டத்திற்கு ஆதரவினை வழங்கியுள்ளனர். அதற்கமைவாக மக்கள் நடமாட்டம் மிக மிககுறைவாக காணப்படுகின்றது. வைத்தியசாலை சேவைகள் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகள் இடம்பெறவில்லை.
வைத்திய சேவைகளிற்காக விசேட நோயாளர் காவு வண்டிகள் ஈடுபட்டுள்ளன. பொலிசார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், ஆங்காங்கே நடமாடும் பொது மக்களிற்கு நடமாட்டத்தை தவிர்க்கும் வகையில் அறிவுவுறுத்தல்களையும் வழங்கி வருகின்றனர்.
கிளிநொசசி நகர் உள்ளிட்ட பல பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகு்ம. கொரோனா தொற்று அச்சுறுத்தல் தொடர்பில் பொலிசாரால் நடைமுறைப்புடுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டத்ிதற்கு கிளிநொச்சி மக்கள் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது,