ஊரடங்குச்சட்டம் நீக்கப்படும் வேளைகளில் எவ்வாறு மக்கள் என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ. வேழமாலிகிதன் அவர்கள் இன்று விளக்கமளித்துள்ளார்.
உலகம் பூராகவும் தற்போது அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கோரோனா நோய் காரணமாக நாடு பூராகவும் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்படவுள்ள நிலையில் நாளை காலை 6 மணியிலிருந்து பி.ப 2 மணிவரை தளர்ததப்படவுள்ள ஊரடங்குச் சட்டத்ததின் போது பொது மக்கள் எவ்வாறு சனநெரிசலை எவ்வாறு கையாள வேண்டும் என்பதையும் பொதுச்சந்தை வர்த்தகர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பிலும் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சந்தை வளாகத்தினுள் எந்தப் பகுதியிலும் விற்பனை செய்ய முடியும் மரக்கறி வியாபாரிகள் மட்டுமன்றி உற்பத்தியாளர்களும் விற்பனை செய்து கொள்ள முடியும் எந்த விதமான வரிகளும் அறவிடப்படமாட்டாது.
நியாயாமான முறையில் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும், பொது மக்கள் பொதுச்சந்தையை நாடுவதைக்குறைத்து கிராமங்களில் உள்ள சந்தையை நாடுவது மிகச் சிறந்தது எனவும் கரைச்சி பிரசேசபையின் தவிசாளரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.