யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலுள்ள வர்த்தக நிலையமொன்றிற்குள் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.முல்லைத்தீவு, உடையார்கட்டை சேர்ந்த சுதாகரன் சுபீகன் என்ற இளைஞனே உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.இன்று காலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.
இறப்பு எப்படி நிகழ்ந்தது என்பது தொடர்பான தகவல் வெளியாகாததால் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஆரம்ப கட்ட விசாரணையில் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.இவரது உடல் இன்று இவரது சொந்த இடமான உடையார்கட்டு .. தெற்கு உடையார்கட்டுக்கு கொண்டு வரப்படும் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.