கிளிநொச்சி மாவட்டமக்களிற்கு தேவையான மரக்கறிகள் கிளிநொச்சியில் உள்ளது தென்னிலங்கையில் இருந்து வரும் மரக்கறிகளை நிறுத்தி கிளிநொச்சியில் மேலதிகமாக இருக்கும் மரக்கறிகளை வேறு மாவட்டங்களுக்கு கொண்டு சென்று கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளை காப்பாற்றுங்கள்.
கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்கதலைவர் – யேசுராஜன்
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் மரக்கறிகளை சந்தைபடுத்தில் ஏற்படும் சிரமம் தொடர்பாக இன்றைய தினம் கிளிநொச்சி சந்தை வளாகத்தில் கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்க தலைவர் யேசுராஜன் ஊடகசந்திப்பு ஒன்றை ஏற்படுத்தியிருந்தார் அதன்போது மேற்கொண்டவாறு கூறினார் அவர் மேலும் குறிப்பிடுகையில்
உள்ளுராட்சி அதிகாரிகளின் ஊடாக மக்களின் மரக்கரிகள் கொள்வனவு செய்தாக நாங்கள் அறிந்திருந்தோம் ஆனால் இன்றுவரை அது நடைமுறையில் உள்ள்ளதா என்று கேள்விகுறியாக உள்ளது இன்று கூட கிளிநொச்சி சந்தைவளாகத்தில் அதிகளவான மரக்கறிகளை மீண்டும் கொண்டு செல்ல வேண்டிய துப்பாக்கி நிலைக்கு தள்ளமப்பட்டுள்ளோம்.
இந்த விடயத்தை அரசாங்கம் கவனத்தில் கொண்டு மானிய முறையிலோ மக்களிற்குசந்தைபடுத்தி விவசாயிகளை காட்க வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.