Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கணவாய் சாப்பிட்டதனால் ஒவ்வாமை காரணமாக சிறுவன் மரணம்.

கணவாய் சாப்பிட்டதனால் ஒவ்வாமை காரணமாக சிறுவன் மரணம்.

1 minutes read

கணவாய் சாப்பிட்டதனால் ஒவ்வாமை காரணமாக சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளதுடன் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.சம்பவம் இந்த இன்று மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கல்லடி மாரியமன் கோவில் வீதியைச் சேர்ந்த தரம் 7 இல் கல்விகற்கும் 11 வயதுடைய அன்புதாஸ் கோகுல் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான் .சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,குறித்த பிரதேசத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தில் 7 பேர் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (18.04.2020) வீதியால் வந்த மீன் வியாபாரி ஒருவரிடம் கணவாயை வாங்கி உயிரிழந்த சிறுவனின் தாயார் சகோதரன் ஆகியோரை தவிர ஏனைய 5 பேர் அன்று பகல் உணவாக சமைத்து சாப்பிட்டனர்.இதனையடுத்து அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை கணவாய் சாப்பிட்ட அனைவருக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று மருந்து எடுத்துள்ள நிலையில் நோய் குணமடையாத நிலையில் திங்கட்கிழமை குறித்த சிறுவன் மற்றும் சிறுவனின் அம்மம்மா, அம்மப்பா ஆகியோர் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவனை அதிதீவிர சிகிச்சைப் பிரிவல் அனுமதிகப்பட்டு சிகிச்சைஅளிக்கப்பட்டது.

அதன் பின்னர் இன்று சிறுவனின் தந்தையார் மற்றும் மாமனார் ஆகியோர் கணவாய் உணவு ஒவ்வாமையினால் சுகயீனம் காரணமாக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று பகல் உயிரிழந்துள்ளான்.இந்த நிலையில் இச் சம்பவம் மட்டக்களப்பு கல்லடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.இந்நிலையில் இநத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More