இன்றைய தினம் (சனிக்கிழமை)வவுனியாவில் ,கொழும்பு வெலிசறை கடற்படை முகாமில் இருந்து வவுனியா, மகாகச்சகொடி கிராமத்திற்கு விடுமுறையில் வந்த கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் அடையாளங்காணப்பட்ட மகாகச்சகொடி கிராமத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த வீடுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இச்செயற்பாட்டை பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அவரது உறவினர்கள், வீடுகளிலும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
தனிமைப்படுத்தப்பட்ட கடற்படை வீரரின் உறவினர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் அவர்களது தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் இன்று தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன.