Wednesday, April 17, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழ்மொழி புறக்கணிக்கப்பும் :அட்டை விநியோகம் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்மொழி புறக்கணிக்கப்பும் :அட்டை விநியோகம் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

1 minutes read

கிளிநொச்சி கல்வி வலயத்தினால் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அடையாள அட்டைகள் இன்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கல்வி வலயத்தினால் , ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையில் , தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு , சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் விவரங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. அடையாள அட்டைகளில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களில் நேற்றைய தினம் செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் கிளிநொச்சி வலய கல்வி பணிப்பாளரினால் ஆசிரியர்களுக்கான அடையாள அட்டை விநியோகம் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை பல ஆசிரியர்கள் கடந்த பல மாதங்களுக்கு முன்னரே அடையாள அட்டைக்காக வலய கல்வி பணிமனையில் விண்ணப்பங்களை சமர்ப்பித்த போதும் அவர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்படவில்லை என ஆசிரியர் தரப்பால் குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More