Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மேலும் 06 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

மேலும் 06 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

1 minutes read

நாட்டில் பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 869 ஆக அதிகரித்துள்ளது.மேலும் 06 பேர் இதுவரை (12.05.2020 – 7.00 மு.ப) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறுதியாக இவ்வாறு அடையாளங்காணப்பட்ட 06 பேரும் கராப்பிட்டிய வைத்தியசாலையிலுள்ள கடற்படையினர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 343 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 517 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.114 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More