Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சர்வதேச அமைப்புகளிலிருந்து விலக தயங்கப்போவதில்லை -கோட்டாபய ராஜபக்ஸ

சர்வதேச அமைப்புகளிலிருந்து விலக தயங்கப்போவதில்லை -கோட்டாபய ராஜபக்ஸ

1 minutes read

இராணுவத்தையும் நாட்டையும் தொடர்ச்சியாக இலக்கு வைக்கும் சர்வதேச அமைப்புகள் அல்லது நிறுவனங்களிலிருந்து வௌியேறுவதற்கு தயங்கப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

11 ஆவது தேசிய இராணுவ வீரர் நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இராணுவ வீரர்களுக்கான நினைவுத்தூபிக்கு அருகில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில், பொலிஸ் மா அதிபர், முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, Admiral of the Fleet வசந்த கரன்னாகொட, Marshal of the Air Force ரொஷோன் குணதிலக்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

முப்படைகளின் தளபதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வருகை தந்ததை அடுத்து இந்த நிகழ்வு ஆரம்பமானது.

சுதந்திர இலங்கையை உருவாக்குவதற்காக 30 வருட யுத்தத்தில் உயிர்த் தியாகம் செய்த படை வீரர்கள் இதன்போது நினைவுகூரப்பட்டனர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More