Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள்.

அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள்.

1 minutes read

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1814 ஆக அதிகரித்துள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் புதிதாக வைரஸ் தொற்றுக்குள்ளான 13 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களுள் 09 கடற்படையினரும் ரஷ்யாவில் இருந்து வருகைதந்த மூவரும் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய ஒருவரும் அடங்குகின்றனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 891 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேலும் தற்போதுவரை வைரஸ் தொற்றுக்குள்ளான 912 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பதுடன், 46 பேர் வைத்திய கண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இலங்கையில் இதுவரை 11 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More