இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 71 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
கேர்ணல் தரத்திலுள்ள 41 பேர் பிரிகேடியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
லெப்டினன்ட் கேர்ணல் தரத்திலிருந்த 30 பேர் கேர்ணல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பணிப்புரைக்கு அமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் பதவி உயர்வு வழங்கப்பட்டதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும் இன்று கோட்டாபய ராஜபக்ஸ தனது 71ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.