இன்று மேலும் நான்கு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்லம், மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2814 ஆக அதிகரித்துள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்டவர்களில், லங்காபுர பிரதேச செயலகத்தின் பணியாளர் ஒருவரும் உள்ளடங்குகிறார்.
இதுதவிர, இன்று 16 பேர் குணமடைந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,333 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது, 470 நோயாளிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 11 பேர் இறந்துள்ளனர்.