Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 15 வயது ஓட்டுனரால் பலியான 12 வயது சிறுவன்

15 வயது ஓட்டுனரால் பலியான 12 வயது சிறுவன்

1 minutes read

அஹூங்கல்ல-வெலிகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்த பாரவூர்தியை உறவினர் ஒருவர் செலுத்தி வந்துள்ள நிலையில் குறித்த பாரவூர்தியில் சிக்கி அந்த வீட்டில் இருந்த 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

வீட்டுக்கு அருகே சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தியை 15 வயது உறவினர் ஒருவர் செலுத்தியுள்ளனர். இதன்போது பாரவூர்திக்கு எதிரே மிதிவண்டியில் வந்த குறித்த சிறுவன் பாரவூர்தியில் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், பலத்த காயங்களுக்குள்ளான சிறுவனை பலபிடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்..

இந்நிலையில், இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 08 பேர் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி இன்று அதிகாலை 4 மணியளவில் கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் சிலாபம் – வலக்கும்புர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

டிப்பர் ரக வாகனம் ஒன்றும் மகிழூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

வலக்கும்புர பகுதியில் மரண வீடொன்றுக்கு சென்று மீள குருநாகல் நோக்கி பயணித்த மகிழூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் மகிழுந்தில் பயணித்தவர்களே உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவத்தில் உயிரிழந்த 05 பேரும் கட்டுமான நிறுவனமொன்றில் தொழில் புரிபவர்கள் என கூறப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More