முல்லைத்தீவின் குமிழமுனை கிராமத்தின் கிழக்குப் பகுதியில் உள்ளது ஆலடிக்குளம்.
முல்லைத்தீவின் குமிழமுனை கிராமத்தின் கிழக்குப் பகுதியில் உள்ளது ஆலடிக்குளம்.
இரு கரைகளிலும் மருதமரங்களடர்ந்து, கோடையிலும் வற்றாமல் பசுமையாக இருக்கும் அந்தக் குளக்கட்டில் உள்ள அதிசயமான பெண் தெய்வச்சிலை தான் படத்தில் உள்ளது. எத்தனை வருடங்களாக அந்தச்சிலை அங்குள்ளது என்று ஊரின் வயோதிபர்களுக்கு கூட தெரியவில்லை. வயல் விதைக்கும் போதும் அறுவடை செய்யும் போதும் பரம்பரை பரம்பரையாக இந்தச்சிலைக்குப் பொங்கலிடுகின்றனர்.
விதைக்க முன்னர் பொங்கலிட்டு “ஆத்தை.. குளத்தில தண்ணி உயர வேணும்” என்றொரு கோரிக்கையை வைத்தால் இரண்டொரு நாளில் குளத்து நீர்மட்டம் உயருமாம்.
கண்களும் நாசியும் உதடும் கைவிரல்களும் மார்பும் என்ற அளவு நேர்த்தியும். முகத்தின் கருணையும் அருகினில் பார்க்கும் போது சிலிர்ப்பாக இருந்தது.
நிச்சயமாக இந்தச்சிலைக்குப் பின் ஒரு வரலாறு இருக்கும். தோன்றிய வரலாறும் அது பெயரக்கப்பட்டு குளக்கட்டில் வந்த வரலாறும் இருக்கும். யாரை கேட்பது என்று தான் புரியவில்லை.
காலப்போக்கில் குசுமாசன தேவிக்கு குமிழமுனையில் ஒரு வரலாற்றை கண்டுபிடிக்கலாம்
வைதேகி நரேந்திரன்