வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவின் துட்டுவாகை கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கானதும் கிராமத்திற்கானதுமான நுழைவாயிற்கோபுரம் இன்று(புதன்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்களின் நிதிப்பங்களிப்போது அமைக்கப்பட்ட குறித்த நுழைவாயில் கோபுரத்தினை நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் திறந்து வைத்திருந்தனர்.
சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியில் அமைக்கப்பட்ட குறித்த நுழைவாயில் கோபுரத்தினை இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த சிற்பக்கலைஞர்கள் வடிவமைத்திருந்தனர்.
குறித்த திறப்பு விழாவில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் சி. சிவகரன், செட்டிகுளம் பிரதேசசபை தலைவர் ஆசீர்வாதம் அந்தோனி உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.