Saturday, May 11, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சில வருடங்களில் ஆளும்தரப்பின் உறுப்பினர்கள் மக்களிடம் மண்டியிடுவார்கள்

சில வருடங்களில் ஆளும்தரப்பின் உறுப்பினர்கள் மக்களிடம் மண்டியிடுவார்கள்

1 minutes read

20 ற்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடுவோர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்பார்கள் என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளையில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “20 ஆவது திருத்தச்சட்டமூல வர்த்தமானி வெளியே வந்தவுடன், நாட்டு மக்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார்கள்.

ஆளம் தரப்பு உறுப்பினர்களே இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டார்கள். இதனால்தான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதற்காக குழுவொன்றை ஸ்தாபித்தார்.

20 இற்கு ஆதரவாக இன்று குரல் எழுப்பும் உறுப்பினர்கள், இன்னும் சில வருடங்களில் மக்கள் மத்தியில் இதற்காக மன்னிப்புக் கேட்பாளர்கள். இது உறுதியாகும்.

ஏனெனில், கடந்த காலங்களில் 18 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் பிற்காலத்தில் இதனையிட்டு மன்னிப்புக் கேட்டார்கள்.

20 இன் ஊடாக ஆளும் தரப்புக்கு தான் முதல் அடி விழுந்துள்ளது. இப்படி தங்களுக்கு இதன் ஊடாக அடி விழும்போதுதான் இதன் வீரியம் புரியும்” என கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More