Tuesday, May 21, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சடலமாக மீட்கப்பட்ட பூசகர் தொடர்பில் வெளிவந்த மேலதிக தகவல்

சடலமாக மீட்கப்பட்ட பூசகர் தொடர்பில் வெளிவந்த மேலதிக தகவல்

1 minutes read

புங்குடுதீவில் வீடு புகுந்து பூசகரை அடித்துக் கொலை செய்துள்ள கும்பல் அங்கிருந்து தப்பித்துள்ளது.

அவரது உதவியாளரைக் கட்டிவைத்துவிட்டு இந்தக் கொலை நள்ளிரவு இடம்பெற்றது என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் கோவில் பூசகரான கிளிநொச்சியைச் சேர்ந்த ரூபன் சர்மா (வயது-33) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

புங்குடுதீவில் பல ஆலயங்களில் பூஜை செய்யும் அவர், மாடு வெட்டுவதற்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்ததுடன்,

பொலிஸாருக்கும் தகவலை வழங்கி அவற்றைக் கட்டுப்படுத்தி வந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பூசகர் கொலையுடன் உதவியாளருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More