Tuesday, May 21, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் ஒரே நாளில் 7பேருக்கு கொரோனா!- மக்களுக்கும் அரசாங்கம் முக்கிய அறிவிப்பு

இலங்கையில் ஒரே நாளில் 7பேருக்கு கொரோனா!- மக்களுக்கும் அரசாங்கம் முக்கிய அறிவிப்பு

1 minutes read

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 395 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று (சனிக்கிழமை) மாத்திரம், 7பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றிற்கு உள்ளாகியிருந்த  மேலும் 9பேர் நேற்று குணமடைந்து  வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 128பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் இதுவரை 13பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை சுகாதார நடைமுறைமுறைகளை பின்பற்றுமாறு தொடர்ந்து மக்களுக்கு, அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More