கிளிநொச்சியில் நான்கு குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற இரண்டு சகோதரிகளின் குடும்பமும், மினுவாங்கொடைப் பிரதேசத்தில் உள்ள பிறிதொரு ஆடைத்தொழிற்சாலையில், கடமையாற்றுகின்ற யுவதி ஒருவரின் குடும்பமும்,
புங்குடுதீவில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான யுவதியின் திருமணப் பேச்சுக்குச்
சென்று வந்த இரண்டு குடும்பங்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
“வரும் முன் பாதுகாக்கும் திட்டத்துடன் சுய தனிமைப்படுத்தல் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் தேவையற்ற வீண் அச்சம்கொள்ளத் தேவையில்லை.
அத்தோடு மிக முக்கியமாக பொதுமக்கள் தேவையற்ற பயணங்கள் குறிப்பாக வெளி மாவட்டங்களுக்கான பயணங்களைத் தவிர்க்க வேண்டும்” என்று சுகாதாரத் துறையினர் அறிவித்துள்ளனர்.