Saturday, May 4, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரசியலமைப்பு திருத்தத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டார்!

அரசியலமைப்பு திருத்தத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டார்!

1 minutes read

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல இதனை தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின்20ஆவது திருத்தம் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்துக்கு கையளிக்கப்பட்டிருந்த நிலையில் சபாநாயகர் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை 20 ஆவது திருத்தம் கடந்த 22 ஆம் திகதி மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நாட்டின் தற்போதைய நிலைமையின் அடிப்படையில், எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுவருகின்றது.

நாடாளுமன்ற வளாகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுவருவதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More