மட்டக்களப்பில் வைத்தியர் ஒருவரின் வங்கி ஏ.ரி.எம் காட்டை திருடி மதுபானக்கடையில் 20 ஆயிரம் ரூபாவுக்கு பியர் வாங்கி அருந்திய 40 வயதுடைய ஒருவரை,
14 நட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.ஏ. றிஸ்வான் நேற்று திங்கட்கிழமை (02) உத்தரவிட்டார்.
குறித்த வைத்தியர் தனியார் வங்கி ஒன்றின் ஏ.ரி.எம். காட்டை பயன்படுத்தி அவரது சம்பளம்த்தை பெற்றுவந்துள்ளார். இந்த நிலையில்; அவரின்; ஏ.ரி.எம். காட் காணாமல் போய்யுள்ள நிலையில்,
மதுபானக்கடை இரண்டில் 20 ஆயிரம் ரூபாவுக்கு மதுபானம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவரின் வங்கிகணக்கில் பணம் கழிக்கப்பட்டு அவரின் கையடக்க தொலைபேசிக்கு வங்கியின் குறுந்தகவல் வந்துள்ளது.
இதனையடுத்து பொலிசாருக்கு முறையிட்டதையடுத்து பொலிசார் மதுபானக்கடைகளுக்கு சென்று விசாரணையில் ஈடுபட்ட போது மட்டக்களப்பு 2ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர்,
வங்கி வைத்தியரின் ஏ.ரி.எம். காட்டை வழங்கி ஒருகடையில் 10 ஆயிரம் ரூபாவுக்கு பியரும் இன்னொரு மதுபானக்கடையில் 10 ஆயிரம் ரூபாவுக்கு மதுபானங்களை கொள்வனவு செய்துள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவரை ஞாயிற்றுக்கிழமை (01) கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நேற்று திங்கட்கிழமை (02) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் எ.சி.ஏ. றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 16 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.