வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக ஊரடங்கு வேளையில் பியர் கொள்கலன்கள் கொண்டு சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக,
வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
சட்டவிரோதமான முறையில் ஊரடங்கு வேளையில் பியர் கொள்கலன்கள் கொண்டு சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
இவர்களிடமிருந்து 72 பியர் கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜே.எம்.துசிதகுமார தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்களான ஜி.ஐ.புஸ்பகுமார, எஸ்.வாசல, எஸ்.பிரேமசிறி,
எம்.ரவிந்திர ஆகியோர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பியர் கொள்கலன்கள்; கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.