Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வீடுகளை உடைத்து கொள்ளையடித்த இருவருக்கு விளக்கமறியல்!

வீடுகளை உடைத்து கொள்ளையடித்த இருவருக்கு விளக்கமறியல்!

1 minutes read
வெளிநாட்டு மதுபானத்திற்கு ஆசைப்பட்டு வசமாக சிக்கிய திருடன்! - TamilSpark

திருக்கோவில் பிரதேசத்தில் நீண்ட காலமாக வீடுகளை உடைத்து பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 18 , 19 வயதுடைய இளைஞர்கள் இருவரை எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிமன்ற நீதவான் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27.12.2020) உத்தரவிட்டார்.

கடந்த மாதங்களில் திருக்கோவில் பிரதேசத்தில் இரு வீடுகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டது. இதில் ஒருவீட்டில் இருந்து, 60 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகையும், 27 ஆயிரம் ரூபா பணமும், மற்றுமொரு வீட்டில் 40 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகையும்  கொள்ளையிடப்பட்டுள்ளது.

இக்கொள்ளை தொடர்பாக பொலிஸார் மேற்கொண்டு வந்த விசாரணையில், சின்னத் தோட்டத்தைச் சேர்ந்த 18, 19 வயது இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கொள்ளையிடப்பட்ட 60 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகையும், பணமும் மீட்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட இருவரையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட ஒருவர் ஏற்கனவே கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்டு, 5 வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை அனுபவித்தவரென்பதுவும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More