உலக பாரம்பரிய நக்கிள்ஸ் மலைத்தொடரில் எருமைகள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிட்டவல, பத்தன மற்றும் ரிவர்ஸ்டன் பகுதியின் காடுகளில் படுகொலை செய்யப்பட்ட எருமைகளை அப்புறப்படுத்தியதாகவும், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் இந்த மோசடியைத் தடையின்றி நடத்தி வருவதாகவும் குறித்த பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவம் குறித்த தகவல் தமக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.