Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் யாழில் பகிஷ்கரிப்பு போராட்டம்!

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் யாழில் பகிஷ்கரிப்பு போராட்டம்!

0 minutes read

மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப் பகிஷ்கரிப்பு நடைபெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக தமது போராட்டத்தை ஆரம்பித்த இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர், வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் வரை பேரணியாக சென்றதுடன் ஆளுநருக்கான மகஜரினையும் கையளித்தனர்.

‘ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கமைய வங்கி ஊழியர்களின் பயிற்சிக் காலத்தை இரண்டு வருடங்களுக்கு மட்டுப்படுத்துன’, ‘அதிகாரிகள் பயிற்சிக் காலத்தினை நீடித்து வங்கி ஊழியர்களது உழைப்பினைச் சுரண்டுவதை உடனே நிறுத்தக’, ‘பிரதமரின் உத்தரவிற்கமைய இலங்கை வங்கியின் பயிலுநர் ஊழியர்களை இரண்டு வருடங்களில் நிரந்தரமாக்குக’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More