Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை திருமதி உலக அழகி கரோலின் ஜூரி பிணையில் விடுதலை

திருமதி உலக அழகி கரோலின் ஜூரி பிணையில் விடுதலை

1 minutes read

திருமதி உலக அழகி கரோலின் ஜூரி மற்றும் சுலா பத்மேந்திர ஆகிய இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

திருமதி இலங்கை அழகிப்போட்டியில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள புஷ்பிகா டி சில்வா, கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் கரோலின் ஜூரிக்கு எதிராக மேற்கொண்டிருந்த முறைப்பாட்டிற்கு அமைவாக கருவாத்தோட்டம் பொலிஸாரால் இருவரும் இன்று கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த இருவரிடமும் பெறப்பட்ட வாக்குமூலத்தையடுத்து பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரையும் எதிர்வரும் 19ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்ச்சையை ஏற்படுத்திய திருமதி உலக அழகி கரோலின் ஜூரி கைது

திருமதி உலக அழகியான கரோலின் ஜூரி மற்றும் மொடல் சுலா பத்மேந்திரா ஆகியோர் கறுவாத்தோட்டம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட கரோலின் ஜூரியிடம் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More