Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மணல் மாபியா குறித்து ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்தார் சாணக்கியன்!

மணல் மாபியா குறித்து ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்தார் சாணக்கியன்!

1 minutes read

மணல் மாபியாக்களின் செயற்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

பாதுகாப்பு ஆலோசனைக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே இவ் விடயம் தொடர்பாக இரா.சாணக்கியன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். வவுனியா மற்றும் அம்பாறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோத மண் அகழ்வு குறித்தும் இரா.சாணக்கியன், ஜனாதிபதியின்

கவனத்திற்கு கொண்டு வந்தார். இயற்கை வளங்கள் அழிக்கப்படுதல், இல்மனைட் மற்றும் கிரவல் மண் அகழ்வு குறித்தும் அவர் இதன்போது கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அத்துடன், இவ்விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More