Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் டோசை செலுத்துவது குறித்து ஆலோசனை!

கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் டோசை செலுத்துவது குறித்து ஆலோசனை!

1 minutes read

இலங்கை மக்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் இரண்டாம் டோசை செலுத்துவது குறித்து இன்று அறிவிக்கப்படவுள்ளது.

தொற்று நோய் தடுப்பு பிரிவில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு கூடவுள்ள தடுப்பூசி தொடர்பான நிபுணர் குழுவினால் இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேநேரம், ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் இரண்டாம் டோசை செலுத்துவதற்காக 350,000 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியை இந்த மாத இறுதிக்குள் நாட்டுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி மற்றும் அமெரிக்காவின் பைசர் ஆகிய தடுப்பூசிகளை நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More