Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 55 கொரோனா நோயாளர்கள்!

மட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 55 கொரோனா நோயாளர்கள்!

1 minutes read

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 55 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் 530 ரபீட் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதில், வாழைச்சேனை பிரதேசத்தில் 25 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 55 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனடிப்படையில் மட்டக்களப்பு சுகாதார பிரிவில் 08 பேரும் களுவாஞ்சிகுடி சுகாதார பிரிவில் 03 பேரும் ஆரையம்பதி சுகாதார பிரிவில் 03 பேரும் சுகாதார பணியாளர்கள் 04 பேரும் சிறைக்கைதிகள் 02 பேருமாக 55 பேர் கொரானா தொற்றுக்குள்ளானதாகவும் அவர் தெரிவித்தார்.

இறுதி வாரத்தில் 235 கொரனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மூன்றாவது அலையின் காரணமாக இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 7268 அன்டிஜன் மற்றும் பீசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 587 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த வைரஸால் 12 பேர் மரணமடைந்துள்ளதாகவும் மயூரன் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More