Sunday, May 5, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மேலும் சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு!

மேலும் சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு!

1 minutes read

அத்தியவசிய தேவைகள் தொடர்பாக மற்றுமொரு விஷேட வர்த்தமானி அறிவித்தலொன்று வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்ரத்தானி அறிவித்தலின்படி, லங்கா சதொச, , இலங்கை ​கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம், கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம்லங்கா சதொச, உணவு ஆணையாளர் திணைக்களம்லங்கா சதொச, கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் சகல உணவு குடிபானப் பொருட்கள் உள்ளிட்ட பொது மக்களுக்கு தேவையான ஏனைய சகல நுகர்வுப் பொருட்களை வழங்குதல், களஞ்சியப்படுத்துதல், விநியோகித்தல் மற்றும் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், மாகாண சபைகளின் கீழுள்ள சகல அரச அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் சுகாதார சேவைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More