Sunday, May 5, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை விடுதலைப் புலிகள் அமைப்பை பிரசித்தப்படும் செய்திகளை பதிவேற்றியதாக இளைஞன் கைது

விடுதலைப் புலிகள் அமைப்பை பிரசித்தப்படும் செய்திகளை பதிவேற்றியதாக இளைஞன் கைது

1 minutes read

இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக விடுதலை புலிகள் அமைப்பினை பிரசித்தப்படுத்தும் வகையில் பல்வேறு செய்திகளை பதிவிட்டமை தொடர்பில் திருகோணமலை குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதியான 24 வயதுடைய இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜிர் ரோஹண தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குழைக்கும் வகையில் செய்திகளைப் பதிவிட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பையும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் புகழும் வகையிலான பதிவுகளை குறித்த சந்தேகநபர் பதிவிட்டுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் குழுவாக தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளமையும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. திருகோணமலை குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியின் தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான செயற்பாடுகள் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சட்டம் ஆகியவற்றின் குற்றமாகக் கருதப்படுவதால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More