Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சீரற்ற காலநிலை- மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

சீரற்ற காலநிலை- மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

1 minutes read

மத்திய மலை நாட்டில் தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருவதன் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளன. இதனால் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி மஸ்கெலியா- மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும் கெனியோன் நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகளும் நேற்று (வியாழக்கிழமை) திறக்கப்பட்டன.

இதேவேளை நேற்று காலை, 70 மில்லி மீற்றர் இற்கும் அதிகமான மழை வீழ்ச்சி, காசல்ரீ நீர்த்தேக்க பகுதியில் பதிவாகியுள்ளன.

அதேபோன்று விமல சுரேந்திர நீர்த்தேக்கப் பகுதியிலும் கடும் மழை பெய்து வருகின்றமையினால் குறித்த நீர்த்தேக்கத்தின் ஆறு கதவுகள் ஊடாக நீர் வான் பாய்கின்றன.

எனவே நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More