Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தைக் கடந்தது!

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தைக் கடந்தது!

1 minutes read

நேற்று வரையில், நாட்டில் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 98 ஆயிரத்து 801 ஆக பதிவாகியிருந்தது.

இந்த நிலையில், கடந்த நான்கு நாட்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிசோதனைகளின் முடிவுகள் தாமதமாக வெளியாகிய நிலையில், மேலும் 4 ஆயிரத்து 484 பேருக்கு தொற்று உறுதியானமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 3 ஆயிரத்து 285 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 2 ஆயிரத்து 163 பேர் பூரண குணமடைந்து இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 48 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், கொரோனா தொற்றினால் இதுவரையில், 7 ஆயிரத்து 750 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More