Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கைதுசெய்யப்பட்டு காணாமலாக்கப்பட்ட மகனைத் தேடிய தந்தை மரணம்

கைதுசெய்யப்பட்டு காணாமலாக்கப்பட்ட மகனைத் தேடிய தந்தை மரணம்

1 minutes read

வவுனியாவில் காணாமல்போன தனது மகனைத் தேடிவந்த தந்தை ஒருவர் நேற்று மரணமடைந்துள்ளார்.  வவுனியா – மதியாமடு, புளியங்குளம் பகுதியை சேர்ந்த 73 வயதான செபமாலை இராசதுரை என்ற தந்தையே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.  

இவ்வாறு உயிரிழந்தவரின் மகன் இராசதுரை விஜி 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த முடிவின் போது 2009.05.24 அன்று ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து இராணுவத்தினர் கைது செய்து, குடும்பத்தினரிடமிருந்து தனியாக பிரித்து அழைத்து சென்றிருந்த நிலையில், கடந்த 12 ஆண்டுகளாக மகன் பற்றிய நம்பகரமான தகவல் ஏதும் அறியாமலேயே  மரணமடைந்தார்.

வவுனியாவில்  1668 நாட்கள் கடந்தும் நடைபெற்று வரும் “காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கேட்கும் தொடர் போராட்டத்தில் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடிப்பதற்காக தொடர்ச்சியாக போராடியிருந்தார்.   

இந்நிலையில் 27 வயதில் காணாமல் ஆக்கப்பட்ட மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More