Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஐ.நா. பொதுச் சபை கூட்டத் தொடர் இன்று ஆரம்பம் | நாளை ஜனாதிபதி கோட்டாபய உரை

ஐ.நா. பொதுச் சபை கூட்டத் தொடர் இன்று ஆரம்பம் | நாளை ஜனாதிபதி கோட்டாபய உரை

1 minutes read

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத் தொடரின் உயர்மட்ட விவாதம் இன்று நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அவர்கள் தலைமையில் இம்முறை ஆரம்பமாகவுள்ள கூட்டத்தொடர், “கொவிட் 19 வைரஸ் தொற்றுப்பரவலில் இருந்து மீள்வதற்கான நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை வளர்த்தல், நிலைத்தன்மையை மீளக் கட்டியெழுப்புதல், பூமியின் தேவைகளுக்கு பதிலளித்தல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மறுமலர்ச்சி” என்ற தொனிப்பொருளிலேயே இடம்பெறவுள்ளது.

இக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  கடந்த செப்டெம்பர் 18 ஆம் திகதி அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு, நியூயோர்க் சென்றடைந்தார்.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், சர்வதேச மாநாடொன்றில் பங்கேற்பதற்காக நாட்டை விட்டுப் புறப்பட்டுச் செல்லும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்பதோடு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் அரச தலைவராக உரையாற்றவுள்ள முதல் சந்தர்ப்பமும் இதுவாகும்.

அதன்படி ஜனாதிபதி செப்டெம்பர் 22 ஆம் திகதியன்று உரையாற்றவுள்ளார்.

இதேவ‍ேளை 100 க்கும் மேற்பட்ட தலைவர்கள் மற்றும் பிற உயர்மட்ட பிரதிநிதிகளும் தங்கள் உரைகளை நேரில் ஆற்றவுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More