Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் சடுதியாக அதிகரித்த அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறித்த விபரம்!

இலங்கையில் சடுதியாக அதிகரித்த அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறித்த விபரம்!

1 minutes read

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் தற்போதைய மொத்த விலைகள் குறித்த விபரம்…

*கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 109 ரூபாயாக இருந்த ஒரு கிலோ சம்பா அரிசி தற்போது 162 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 48% அதிகமாகும்.

*கடந்த ஆண்டு 93 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கோதுமை மா தற்போது 123 ரூபாயாக உயர்ந்துள்ளது.

*கடந்த ஆண்டு 183 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பருப்பு தற்போது 259 ரூபாயாக உயர்ந்துள்ளது.

*கடந்த ஆண்டு 550 ரூபாயாக இருந்த ஒரு கிலோ உலர் மீன் தற்போது, 935 ரூபாயாக அதிகரித்துள்ளது.

*2020 நவம்பரில் 430 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோழிக்கறி தற்போது 690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

*கடந்த ஆண்டை விட 400 கிராம் பால் பவுடர்கள் 100 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

*அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், தக்காளி விலை 164%, வெண்டைக்காய் 188%, போஞ்சி 70%, கேரட் 70%ஆக அதிகரித்துள்ளது.

*கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் எரிவாயு சிலிண்டர் ஒன்று 1257 ரூபாயினால் அதிகரித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More