Friday, May 10, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை கட்டணம் 20 வீதத்தால் அதிகரிப்பு

பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை கட்டணம் 20 வீதத்தால் அதிகரிப்பு

1 minutes read

எரிபொருள் நிவாரண கோரிக்கைக்கு அரசாங்கம் இதுவரை எந்த பதிலையும் வழங்காததால் பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணத்தை நாளை முதல் 20 வீதத்தால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை அனைத்து மாகாண பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை சங்கம் தீர்மானித்திருக்கின்றது.

இது தொடர்பில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அகில இலங்கை அனைத்து மாகாண பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத்,

அரசாங்கம் கடந்த வாரம் எரிபொருட்களின் விலை அதிகரித்திருந்தது. அதன் பிரகாரம் எமக்கு எரிபொருள் நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாங்கள் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் அரசாங்கத்திடம் கேட்டிருந்தோம். 

ஆனால் இதுதொடர்பாக அரசாங்கம் சார்ப்பாக யாரும் இதுவரை எம்மை அழைத்து பேசவில்லை. பாடசாலைகள் விடுமுறை முடிந்து நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன.  அதனால் பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணத்தை அதிகரிப்பதை தவிர எமக்கு வேறு வழியில்லை என்று கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More