Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையை ஆதிக்கம் செலுத்தும் ஒமிக்ரோன்!

இலங்கையை ஆதிக்கம் செலுத்தும் ஒமிக்ரோன்!

1 minutes read

நாட்டில் புதிதாக 160 ஒமிக்ரோன் (Omicron) நோயாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, டெல்டா மாறுபாட்டைவிட இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக ஒமிக்ரோன் தொற்று மாறி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

BA 1, BA.2 மற்றும் BA.3 ஆகிய Omicron இன் மூன்று துணைப் பரம்பரைகள் உலகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவற்றில் இரண்டு நாட்டில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீ ஜயவர்தனபுரவின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் பணிப்பாளர் வைத்தியர் சந்திமா ஜீவந்தர தெரிவித்தார்.

இது குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள அவர், நாட்டில் அடையாளம் காணப்பட்ட 160 ஒமிக்ரோன் வழக்குகளில் 139 பிஏ.1 துணை வம்சாவளியைச் சேர்ந்தவை என்றும் 27 வழக்குகள் பிஏ.2 க்கு சொந்தமானவை என்று சுட்டிக்காட்டினார்.

BA.1 மற்றும் BA.1 க்கு இடையிலான வேறுபாட்டை விளக்கிய அவர், BA.1 உடன் ஒப்பிடும்போது BA.2 கூடுதல் பிறழ்வுகளைக் கொண்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் கொழும்பு, காலி, மாத்தறை, கண்டி, கம்பஹா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்தே புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவம் அவர் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More