Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் அரசாங்கத்தின் வசமுள்ள நிறுவன ஊழியர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு!

இலங்கையில் அரசாங்கத்தின் வசமுள்ள நிறுவன ஊழியர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு!

0 minutes read

அதற்கமைய, கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் இந்த மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான சுற்றுநிருபம் திறைசேரி செயலாளரால் அனுப்பப்பட்டுள்ளது.

இம்மாதம் முதல் வழங்கப்படவுள்ள இந்த 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை அரசாங்கத்தின் வசமுள்ள நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் வழங்குவது தொடர்பான தீர்மானத்தை அதன் பணிப்பாளர் சபை மேற்கொள்ளும் என்றும் அது தொடர்பில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகலவினால் குறித்த நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொடுப்பனவு அற்ற விடுமுறையில் உள்ள ஊழியர்களுக்கு இந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது என்றும் அரைவாசி கொடுப்பனவுடன் விடுமுறையில் உள்ள ஊழியர்களுக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவில் 50 சதவீதம் மாத்திரம் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More