தனி ஒரு மனிதனினால் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகளால் இன்று மக்கள் வரிசைகளில் நின்று அவதிப்படுகின்றனர் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மறைமுகமாகச் சாடியுள்ளார் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில.
2021 -இல் இறக்குமதிக்காக இலங்கை 20.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டது. இவற்றில் வெறும் 4.6. பில்லியன் டொலர்களே எரிபொருள், எரிவாயு, நிலக்கரி மற்றும் மருந்துகள் இறக்குமதிக்காக செலவிடப்பட்டது.
நாங்கள் வலியுறுத்தியவாறு ஒரு வருடத்துக்கு முன்னரே அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்திருந்தால் மக்கள் இன்று நீண்ட வரிசைகளில் காத்திருந்து அவதிப்படும் நிலை ஏற்பட்டிருக்காது எனவும் தனது ட்விட்டரில் உதய கம்மன்பில பதிவிட்டுள்ளார்.