Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா சீனாவிடம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியையும் கோரியுள்ள இலங்கை

சீனாவிடம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியையும் கோரியுள்ள இலங்கை

1 minutes read

மேலதிக நிதி உதவியை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் சீனாவிடம் 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனையும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியையும் கோரியுள்ளதாக தூதரகம் இன்று (21) விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றத்திற்கு மேலதிகமாக இந்த நிதி உதவியை இலங்கை கோரியுள்ளதாக, இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள இம்மேலதிக நிதி உதவிக்கான கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றம் உட்பட 2020 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 2.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா இலங்கைக்கு வழங்கியுள்ளதாக Qi Zhenhong சுட்டிக்காட்டியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More