Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ் விடுதி தடாகத்தில் ஆண் சடலம் மீட்பு

யாழ் விடுதி தடாகத்தில் ஆண் சடலம் மீட்பு

1 minutes read

யாழ். நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ். நகரை சேர்ந்த 6 பேர் தனியார் விடுதியில் நேற்றிரவு தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (02) காலை விடுதி நிர்வாகத்தினர் நீச்சல் தடாகத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் மிதப்பதை அவதானித்துள்ளனர்.

விடயம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவித்ததுடன், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவருடன் விடுதியில் தங்கியிருந்தவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More